செவ்வாய், 17 மே, 2011

என்ன‌தான் செய்கிர‌து எம‌து நிந்த‌வூர் உலமா ச‌பை?



அல்லாஹுவின் ட்டலய்கயும் ற்றும் நபி [ஸல்] அவர்களின் ழிகாட்டுதல்கலயும் அப்பட்டமாகஒரு ஊரே மீறுகிரது ஆனால் லமைபோள் எமது உலமா யும் உலமாக்களும் தூங்கி கொண்டுதான் உல்லது.

ல்முனை க்கரை ள்ளி கொடியேற்றம் என்னும் பெயரில் ஒரு பெரும் க்கள் கூட்டமே நரகிற்கான இலவநுழய்வு சீட்டுகலை வாங்கிக்கொண்டு இறிக்கிம் போது அதை டுக்கவேண்டிய உலமாக்களோ இன்னும் வுனம் காப்பது எதற்காக? எந்த க்திக்காகஅஞ்சுகிரார்கள்? இவர்களுக்கு அல்லாஹ் இட்டிரிக்கும் ட்டலயை றுக்கிரார்களா? 

உமக்கு கட்டளையிடப்பட்டதை தயவு தாட்சன்யமின்றி எடுத்துரைப்பீராக. [அல்குர்ஆன் 15:94]

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
திருக்குர்ஆன் 3:104 

நபி [ஸல்] அவர்கள் வழி காட்டுதள்!

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 70

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு , அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. அது அ(வ்வாறு பின் தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதையும் குறைத்துவிடாது. தவறான வழிக்கு மக்களை அழைத்தவருக்கு , அவரைப் பின் தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு. அது அவர்களது பாவத்தில் எதையும் குறைத்துவிடாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல் : முஸ்லிம் 4194

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின் உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)  நூல்: புகாரி 2942

இவ்வாறு ம‌க்க‌லைய் வ‌ழிநடாத்த‌ வேண்டிய‌ உலமாக்க‌ளும் க‌ல்விமான்க‌ளும் இன்னும் மௌன‌ம் காக்கிரார்க‌ள், அல்லாஹூவுக்கும் அவ‌னுட‌ய‌ ர‌ஸூலுக்கும் க‌ட்டுப்ப‌ட‌வேண்டிய‌ இவ‌ர்க‌ள், அல்லாஹுவுக்கு மாத்திர‌ம் அஞ்ச‌வேண்டிய‌ இவ‌ர்க‌ள் அல்லாஹுவை த‌விர‌ ம‌ற்ற எல்லாவ‌ற்றுக்கும் அஞ்சுகிரார்க‌ள், அடிபணிகிரார்க‌ள்.
குர் ஆன் வ‌ச‌னம்க‌லயும் நபி [ஸல்] அவ‌ர்க‌ளின் பொன் மொழிக‌லயும் ம‌க்க‌ளுக்கு எடுத்து சொல்லி தீமையை த‌டுக்க‌ வேண்டியவ‌ர்க‌ள் இன்னும் விழித்துக்கொள்ள வில்லை!

எந்த‌ அடக்கத்தலங்களையும் (கப்று) வ‌ணக்க‌த்த‌லம் ஆக்காதீர்க‌ள் அதில் விழா எடுக்காதீர்க‌ள் என்னும் க‌டும‌யான எச்ச‌ரிக்கைக‌லை அல்லாஹுவும் அவ‌னுட‌ய‌ தூத‌ர் நபி [ஸல்] அவ‌ர்க‌ளும் விடுத்திரிக்கும்போது எம‌து மார்க்க‌ அறிஞ்ச‌ர்க‌ளுக்கோ அது எவ்வ‌க‌யிலும் ப‌ய‌ன் த‌ர‌வில்லை.  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடக்கத்தலங்களை (கப்று) நோக்கித் தொழாதீர்கள் ; அவற்றின் மீது உட்காராதீர்கள்.
 இதை அபூமர்ஸத் அல்ஃகனவீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  நூல் : முஸ்லிம்  1768,1769

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத் 1746,

அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர். அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 427, 434, 1341, 3873

உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கு என்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேறெவரை?'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: புகாரி 3456

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.  
(அல்குர்ஆன் 16:20, 21)

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:18)

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 7:188

யாருக்கு அவன் அனுமதியளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை பயன் தராது.
(அல்குர்ஆன் 34:23)

இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.
(அல்குர்ஆன் 30:52)

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.
(அல்குர்ஆன் 35:22)

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!
(அல்குர்ஆன் 7:194)

மனிதன் இறந்து விட்டால் அவனது செயல்பாடுகளும் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்முஸ்லிம் 3084

நம்பிக்கை கொண்டோம் என்ப‌த‌ற்காக‌ மாத்திர‌ம் சோத‌னய்க‌லில் இருந்து த‌ப்பித்துவிட‌லாம் என்று எம‌து உலமாக்க‌ளும் க‌ல்விமான்க‌ளும் நினைத்துக்கொண்டார்க‌ள் போலும்!

நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான்.
திருக்குர்ஆன் 29:2,3 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)  நூல்: திர்மிதீ 2323 

யாஅல்லாஹ் எம‌து உலமாக்கலயும் க‌ல்விமான்க‌லயும் உன்னுட‌ய‌ வ‌ச‌ணம்க‌லை கொண்டும் உன்னுட‌ய‌ இறுதி தூத‌ரின் [ஸல்] வ‌ழிகாட்டுத‌ல்க‌லை கொண்டும் எம‌து ச‌மூகத்தை வ‌ழி நடாத்துவ‌த‌ற்கு அருள் புறிவாயாக‌.

நண்றி……

நிந்தவூர் தெளஹீத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக